திருக்கடைமுடி (கீழையூர், கீழூர்)

இறைவர் திருப்பெயர்: கடைமுடிநாதர், அந்திசம்ரக்ஷணீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: அபிராமி.
தல மரம்: கிளுவை.
தீர்த்தம் : கருணாதீர்த்தம்.
வழிபட்டோர்: பிரமன், கண்வமகரிஷி ஆகியோர்.

தல வரலாறு

      • மக்கள் வழக்கில் கீழையூர் என்றும் கீழூர் என்றும் வழங்குகிறது. (கீழையூர் என்பது ஏழு ஊர்கள் சேர்ந்து – மிகப் பெரிய ஊர். இதனால் இதற்கு ஏழூர் என்றும் பெயர் வழங்குகிறது. (திருச்சென்னம்பூண்டி – என்னும் ஊரே கல்வெட்டின்படி கடைமுடி என்பர் ஆய்வர். 
      • பிரமன், கண்வமகரிஷி முதலியோர் வழிபட்டதாக ஐதீகம்.

 

தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - அருத்தனை அறவனை

சிறப்புக்கள்

      • காவிரி இங்கு வடக்கு முகமாக வந்து மேற்காக ஓடுவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.
      • மூலவர் – சற்று உயர்ந்த பாணத்துடன் தரிசனம் தருகிறார்.

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மயிலாடுதுறை – பூம்புகார் சாலையில்; மேலையூர் மேலப்பாதி தாண்டி, கீழையூர் என்று பெயர்ப்பலகையுள்ள ஊரையும் கடந்து, சற்று மேலே சென்று ‘சத்திரம் Stop’ என்னுமிடத்தில் கீழையூர் 2 கி.மீ. என்று கைகாட்டி உள்ள இடத்தில் அது காட்டும் பாதையில் சென்று, கீழையூர் பேருந்து நிற்குமிடத்தில் இடப்பால் திரும்பிச் சென்றால் கோயிலை அடையலாம். தொடர்புக்கு :- 94427 79580 , 04364 – 283 261.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com