திருவலஞ்சுழி தலபுராணம்

இறைவர் திருப்பெயர்: கபர்த்தீஸ்வரர், கற்பகநாதேஸ்வரர், வலஞ்சுழிநாதர்.
இறைவியார் திருப்பெயர்: பெரிய நாயகி, பிருகந்நாயகி.
தல மரம்: வில்வம்.
தீர்த்தம் : காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம்.
வழிபட்டோர்: உமையம்மை, சம்பந்தர்,அப்பர் ,திருமால், இந்திரன், பிரமன், ஆதிசேஷன், ஏரண்டமுனிவர்.

தல வரலாறு :

 

      • ஆதிசேஷன் வெளிப்பட்டப் பள்ளத்தில் காவிரியாறு பாய்ந்து பிலத்தினுள் (பாதாளத்தில்) அழுந்தியது. ஏரண்ட முனிவர் அப் பிலத்தினுள் இறங்க, காவிரி வெளிவந்து, வலமாய்ச் சுழித்துக்கொண்டு சென்ற காரணத்தால், இப் பெயர் பெற்றது. 
      • அமுதம் பெறுதற் பொருட்டுத் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபொழுது பூஜித்த வெள்ளைப் பிள்ளையாரை இந்திரன் இத் தலத்தில் எழுந்தருளுவித்து, வழிபட்டான்.

 

 

தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் -	1. விண்டெலாமல ரவ்விரை, 
					2. என்னபுண்ணியஞ் செய்தனை, 
					3. பள்ளமதாய படர்சடை. 

			  2. அப்பர்   -	1. ஓதமார் கடலின், 2. அலையார்புனற்கங்கை.

 

தல மரம் : வில்வம்

சிறப்புக்கள் :

      • திருவிடை மருதூரானது மகாலிங்கத் தலமாக விளங்க, அதற்குரிய பரிவாரத் தலங்களுள் இது, விநாயகர் தலம். இங்குள்ள வெள்ளைப் பிள்ளையார் கோவில் மிகச் சிறப்பானது.மிகவும் வேலைப்பாடுடையது. 
      • சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.

  

அமைவிடம் இந்தியா – மாநிலம் : தமிழ் நாடு இது, கும்பகோணம்-தஞ்சாவூர் இரயில் பாதையில், சுவாமிமலை நிலையத்திலிருந்து வடக்கே 1-கி. மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணம்- தஞ்சை நெடுஞ்சாலையில் இத்தலம் உள்ளது. தொடர்புக்கு :- 0435 – 245 4421 , 245 4026.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com