இந்திரதூமன் என்னும் அரசர் ஒருமுறை கவரிமானை வேட்டையாடி அதனை துரத்திக் கொண்டே சோளிங்கர் காட்டுக்குள் நுழைந்தார். அவர்துரத்தி வந்த மான் அங்கு சின்ன மலையில் ஏறத் தொடங்கியது.
மன்னனும் விடாமல் மலை மீது ஏறினான். ஆனால் அவன் கண் முன்னே அம்மான் ஜோதி ஸ்வரூபமாக மாறி பின் மறைந்து விட்டது. ஆச்சரியமடைந்த மன்னர் அன்று முதல் அகிம்சையை பின்பற்றினார்.
ஸ்ரீயோக நரசிம்மரின் விருப்பப்படி மன்னனை அகிம்சை பாதையில் திருப்ப, ஸ்ரீயோக ஆஞ்சநேயர் மானை ஆட்கொண்டு ஜோதி ஸ்வரூபமாக மன்னருக்கு அருளினார். சோழ சோளிங்கரில் கும்போதரன் என்னும் அரக்கனின் அட்டகாசத்தை மன்னர் இந்திரதூமன் அகிம்சை முறையிலேயே அடக்கி, அந்த ஊருக்கு அமைதியைக் கொண்டு வந்தார்.
Please follow and like us: