நாராயண மந்திரம் – அதுவே நாளும் பேரின்பம்
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து …
பரமன் அருள் தரும் சாதனம் …
(நாராயண மந்திரம்)
உடலினை வருத்தி மூச்சினை அடக்கும்
தவத்தால் பயனில்லை !
உயிர்களை வதைத்து ஓமங்கள் வளர்க்கும்
யாகங்கள் தேவையில்லை !
மா தவ மது சூதனா என்ற மனதில் துயரமில்லை
(நாராயண மந்திரம்)
ஆதியும் அந்தமும் = நாராயணனே
அன்னையும் தந்தையும் = நாராயணனே
பக்தியும் முக்தியும் = நாராயணனே
பகலும் இரவும் = நாராயணனே
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து,
பரமன் அருள் தரும் சாதனம்
(நாராயண மந்திரம்)
நாராயணா ஹரி நாராயணா
நாராயணா லக்ஷ்மி நாராயணா
நாராயணா ஹரி நாராயணா
நாராயணா லக்ஷ்மி நாராயணா… !!!
பெருமாளை வணங்குவோம். பிரச்னைகளில் இருந்து காத்தருள்வார். திருமாலை வணங்குவோம். நல்ல திருப்பங்கள் தந்து, திருப்தியும் நிம்மதியுமாக வாழச் செய்வார். நாராயணனைத் தொழுவோம். நாளெல்லாம் நலமுடன் வாழ்வோம்!