இறைவர் திருப்பெயர்: | தர்மபுரீஸ்வரர் (இவர் வடதளி – மாடக் கோயில் இறைவன்), சோமேசர் (இவர் பழையாறை இறைவன்) . |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | விமலநாயகி (இவர் வடதளி – மாடக் கோயில் இறைவியார்), சோமகலாம்பிகை (இவர் பழையாறை இறைவியார்). |
தல மரம்: | நெல்லி |
தீர்த்தம் : | சோம தீர்த்தம். |
வழிபட்டோர்: | அப்பர், கருடன், ஆதிசேஷன் முதலியோர். |
தல வரலாறு
-
-
- இவ்வூரின் தெற்கிலும் வடக்கிலும் முடிகொண்டான் ஆறும், திருமலைராயன் ஆறும் ஓடுகின்றன. முடிகொண்டான் ஆறு முற்காலத்தில் பழையாறு எனப்பட்டதால் அதன் கரையிலுள்ள ஊர் பழையாறை எனப்பட்டது; அதன் வடகரையில் உள்ள ஊர் பழையாறை வடதளி எனப்பட்டது.
-
தேவாரப் பாடல்கள் : அப்பர் - தலையெ லாம்பறிக் குஞ்சமண்.
தல மரம் : நெல்லி
சிறப்புக்கள்
-
-
- சோழமன்னர்களின் தலைநகர்களுள் ஒன்றாக விளங்கியத் தலம்.
- பல்லவ மன்னவர்க்கு அடங்கிச் சோழர்கள் சிற்றரசாக இருந்த காலத்தில் அவர்கள் வாழ்ந்த இடம் பழையாறை. பிற்காலச் சோழர் ஆட்சியில் இவ்வூர் இரண்டாவது தலைநகரமாயிற்று. சோழர் அரண்மனை இருந்த இடம் “சோழமாளிகை” என்னும் தனி ஊராக உள்ளது.
- தேவார காலத்தில் 1. முழையூர், 2. பட்டீச்சரம், 3. சத்திமுற்றம், 4. சோழமாளிகை ஆகிய நான்கு ஊர்களும் சோழர்களின் நாற்படைகளாக விளங்கியுள்ளன.
- இவ்வூர் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் – பழையாறை நகர் என்றும், 8-ஆம் நூற்றாண்டில் – நந்திபுரம் என்றும், 9, 10-ஆம் நூற்றாண்டில் – முடிகொண்ட சோழபுரம் என்றும், 12-ஆம் நூற்றாண்டில் இராசபுரம் என்றும் வழங்கப்பெற்றுள்ளது.
- பழையாறை நான்கு சிறு பிரிவுகளாகும் – 1. வடதளி:- (தாராசுரத்திலிருந்து 5 கி. மீ. தொலைவு, அப்பர் பெருமான் உண்ணாவிரதமிருந்த இடம். தற்போது அதிக வீடுகளில்லை.) 2. மேற்றளி, 3. கீழ்த்தளி (பழையாறை), 4. தென்தளி என்பன அந்நான்காகும்.
- சம்பந்தப்பெருமான் “அப்பரே” என்று திருவாய் மொழிந்த திருநாவுக்கரசரின் தேவாரப்பாடல் பெற்றத் திருத்தலம்.
- சமணர்களால் மறைக்கப்பட்டு அப்பரால் உண்ணா நோன்பிருந்து வெளிப்படுத்தப்பட்ட பெருமான் வீற்றிருக்கும் (வடதளி) தலம்.
- மங்கையர்க்கரசி நாயனார் அவதரித்த திருத்தலம்.
- மங்கையர்க்கரசி நாயனாரின் திருவுருவச் சிலை இத்திருக்கோயில் உள்பிரகாரத்தில் தெற்கு நோக்கி உள்ளது.
மங்கையர்க்கரசியாரின் அவதாரத் தலம் : பழையாறி (கீழப் பழையாறை). வழிபாடு : குரு வழிபாடு. முத்தித் தலம் : மதுரை குருபூசை நாள் : சித்திரை - ரோகிணி.
- மங்கையர்க்கரசியார் – இவர் மணிமுடிச் சோழனின் மகள் என்பர். இவன் பழையாறையைத் தலைநகராகக் கொண்டவன். இவனே அப்பர் பொருட்டுச் சிவலிங்கத்தை வெளிப்படுத்தியவனாக இருக்க வேண்டும். திருப்பனந்தாளில் சாய்ந்த சிவலிங்கத்தை நிமிர்த்த முயன்றவனும் இவனேயாகும் (திரு. K.M. வேங்கடராமையா அவர்களின் ஆய்வுக் குறிப்பு – பெரிய புராணம் – பட்டுசாமி ஓதுவார் பதிப்பு.)
- அமர்நீதி நாயனார் அவதரித்த திருப்பதி.
அமர்நீதியாரின் அவதாரத் தலம் : பழையாறி (கீழப் பழையாறை). வழிபாடு : சங்கம வழிபாடு. முத்தித் தலம் : நல்லூர். குருபூசை நாள் : ஆனி - பூரம்.
- இங்குள்ள (சோம தீர்த்தம்) தீர்த்தக் குளத்துநீர் சித்தபிரமை முதலியவைகளைப் போக்கவல்லது என்று நம்பப்படுகிறது.
- இராசராச சோழனால் திருப்பணி செய்யப்பட்ட இக்கோயில் அவனுடைய இயற்பெயரால் அருண்மொழித் தேவேச்சரம் என்றழைக்கப்படுகிறது.
- குந்தவைப் பிராட்டி இவ்வூரில்தான் இராசேந்திரனை வளர்த்தாள்.
- இத்தலத்தைச் சூழ்ந்துள்ள 1. நல்லூர், 2. வலஞ்சுழி, 3. சத்திமுற்றம், 4. பட்டீச்சரம், 5. ஆவூர் என்னும் ஐந்து தலங்களையும் ஒரே நாளில் தக்ஷுணாயன புண்ணிய நாளில் – வழிபடுவது சிறப்புடையதென்று மக்கள் வழக்கில் சொல்லப்படுகிறது.
-
அமைவிடம் அ/மி. சோமேசுவரர் திருக்கோயில், பழையாறை வடதளி, பட்டீசுவரம் (அஞ்சல்), கும்பகோணம் (வட்டம்) – 612 703. தொலைபேசி : +91-99948 47404 / +91-93444 36299 / 0435-3919971. மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் – ஆவூர் பாதையில் முழையூர் சென்று அவ்வழியாக இத்தலத்தை அடையலாம்
Please follow and like us:
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.